வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்துள்ள கம்பிளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரகாஷ்(26), திண்டுக்கல்லில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
கம்பிளியம்பட்டி வழியாக திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் திங்கள்கிழமை வந்துள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ்(19) என்பவரும் வந்துள்ளார். அக்கறைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில், நிலை தடுமாறி சிமெண்ட் தொட்டி மீது விழுந்து பிரகாஷ் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
பலத்த காயமடைந்த பிரகாஷ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். மோகன்ராஜ் சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.