மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண்மருத்துவமனை, ராஜேந்திரன் நினைவு அறக்கட்டளை ஆகியவை சார்பில் வாடிப்பட்டியில் சனிக்கிழமை இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு அறக்கட்டளைத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் கராத்தே சிவா, மேலாளர் அஸ்வதாமன், ஒருங்கிணைப்பாளர் முனிஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் டாக்டர் ரோஷினி தலைமையிலான குழுவினர் 90 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.
இதில் 50 பேர் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.