வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு

வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம்: வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். பிளாஸ்டிக் குடங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சண்முகவள்ளி. இவர் தனது வீட்டில் சனிக்கிழமை மாலை அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் அமர்ந்திருந்த இடத்தில் திடீரென 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதில் தவறி விழுந்த அவருக்கு முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டடப் பணிகள் காரணமாக இப்பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com