மதுரையில் தேக்வாண்டோ விளையாட்டு நடுவர்களுக்கான சிறப்புப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில் மதுரை மாவட்ட அளவில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேக்வாண்டோ சர்வதேச நடுவரும், தேக்வாண்டோ மதுரை அமைப்பின் மாவட்டச் செயலருமான சென்னா கே.நாகராஜ் பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு தேக்வாண்டோ விளையாட்டின் பழைய விதிமுறைகள் குறித்தும், புதிதாக சேர்க்கப்பட்ட விதிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், போட்டிகளின் போது நடுவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் செயல்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பெண்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.