மதுரையில் நேதாஜி சாலை, கீழ ஆவணி மூல வீதி, மணிநகரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மின்பகிர்மான வட்ட தெற்கு செயற்பொறியாளர் ஆர்.சுஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கோவில் மற்றும் ஆரப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மற்றும் உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: கீழ ஆவணி மூலவீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்காவணி மூலவீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடைத்தெரு, நேதாஜி சாலை, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழச்சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி.
சுங்கம்பள்ளிவாசல், யானைக்கல், திருமலைராயர் படித்துறை வடக்குவெளிவீதி, புட்டுத்தோப்பு, சுடுதண்ணீர் வாய்க்கால், ஆரப்பாளையம் கிராஸ் சாலை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம்.
அழகரடி, மோதிலால் பிரதான சாலை 1, 2 ஆகிய தெருக்கள், ராஜேந்திரா பிரதான சாலை, மேலப்பொன்னகரம் பிரதான சாலை, பொன்னகரம் ஒர்க் ஷாப், கனகவேல்காலனி, ஆறுமுச்சந்தி, ஆட்டுமந்தைப் பொட்டல், சிம்மக்கல், வடக்குவெளிவீதி, ராஜா மில் ரோடு, ஸ்காட் ரோடு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ்ஹவுஸ் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.