மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 13 பேர் மாநில அளவிலான பூப்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய விளையாட்டுக் குழுமம் சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான பூப்பந்துப் போட்டிகள் மதுரையில் நடைபெற்றன. இதில் மகளிருக்கான 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் ஓ.சி.பி.எம். பள்ளி மாணவியர் டி.காருண்யா, ஏ.கே.பிரீத்தி, ஏ.வி.லாவன்யா, ஐ.ஹரிணி, இ.ஆர்.எமிமாள் ஆகியோர் சிறப்பிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
மேலும் 17 வயதுக்குள்ளானோருக்கான மகளிர் போட்டியில் இப்பள்ளி மாணவியர் ஆர்.சினேகா, எம்.அக்சயா, எம்.ஆர்த்தி ஆகியோரும், 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் பி.ஸ்ரீ நிதி, பி.ராஜலட்சுமி, எம்.ஜனனி, எம்.ஜோதிலட்சுமி ஆகியோரும் சிறப்பிடம் பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலப் போட்டிகளுக்குத் தேர்வானவர்களையும், அதற்கு காரணமான உடற்கல்வி இயக்குநர் டி.ரூபிசெல்லத்தாய் மற்றும் ஆசிரியர்கள் ஆர்.ராஜேஷ்கண்ணன், சர்மிளா ஆகியோரையும் பள்ளித் தாளாளர் எஸ்.நிர்மலா, தலைமை ஆசிரியை என்.மேரி ஆகியோர் பாராட்டினர். இப்பள்ளி மாணவிகள் ஏற்கெனவே மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்களுக்குத் தேர்வாகி அதிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.