வணிகத்துறை உதவி இயக்குநர் தேர்வில் 340 பேர் பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வணிகத் துறை உதவி இயக்குநர் தேர்வில் 340 பேர் பங்கேற்றனர்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வணிகத் துறை உதவி இயக்குநர் தேர்வில் 340 பேர் பங்கேற்றனர்.
    தமிழ்நாடு தேர்வாணையம் சார்பில் தொழில் மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர் பணிக்கான தேர்வு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் அருள்மிகு மீனாட்சி அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும்,  செனாய்நகர் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் அமைக்கப்பட்ட  தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.
  தேர்வுக்கு மதுரையிலிருந்து 724 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 340 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர்.  தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தும் 384 பேர் தேர்வெழுத வரவில்லை.  
 அருள்மிகு மீனாட்சி அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வறையை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   தேர்வறைகள் முன் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com