வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைத் திருட்டு

மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை  மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை  மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மதுரை அருகே உள்ள சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (52). இவர் குடும்பத்தினருடன் ஜூலை 14-ஆம் தேதி சென்னை சென்று விட்டார். இந்நிலையில் 15-ஆம் தேதி காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக உறவினர் பழனி, நடராஜனுக்கு  தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரை வந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது  பீரோவில் இருந்த 18  பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நப ர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
இதுகுறித்து சிலைமான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com