காவல்துறைக்கு ஏ.பி.வி.பி. கண்டனம்

சென்னையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு மதுரை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு மதுரை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலர் காளீஸ்வரன் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:   
  சென்னையில் பச்சையப்பன் கல்லூரி பகுதியில் நின்றிருந்த ஏபிவிபி அமைப்பின் சென்னை மண்டல அமைப்புச் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோரை  காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.  மாணவர்கள் மீது திடீரென எந்தவிதக் காரணமுமின்றி தாக்கிய காவல்துறைக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.  தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com