மதுரை ஆத்திகுளம் பகுதியில் இம்மாத இறுதியில் மின் கணக்கீடு

மதுரை ஆத்திகுளம் பகுதியில் இம்மாத இறுதியில் மின்கணக்கீடு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆத்திகுளம் பகுதியில் இம்மாத இறுதியில் மின்கணக்கீடு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழக வடக்கு பெருநகர் வட்ட செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  
     மதுரை வடக்கு கோட்டம் ஆத்திகுளம் மின்பிரிவில் வழக்கமாக மாத முதல் வாரத்தில் மின் கணக்கீடு நடந்துவரும் நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஜூலை மாத இறுதியில் மின்கணக்கீடு பணிகள் நடைபெறும்.  அதன்படி ஆத்திகுளம் பகுதி கனகவேல்நகர் 1 முதல் 3 தெருக்கள் வரை, மூகாம்பிகை கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கங்கை தெரு ஆகிய பகுதிகளில் மின் கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாள்களுக்குள் மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம்.
        இதுதொடர்பான விவரங்களுக்கு திருப்பாலை உதவி செயற்பொறியாளர் 0452-2680815, ஆத்திகுளம் மின்பொறியாளர் 0452-2681130 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com