மதுரை ஆத்திகுளம் பகுதியில் இம்மாத இறுதியில் மின்கணக்கீடு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழக வடக்கு பெருநகர் வட்ட செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மதுரை வடக்கு கோட்டம் ஆத்திகுளம் மின்பிரிவில் வழக்கமாக மாத முதல் வாரத்தில் மின் கணக்கீடு நடந்துவரும் நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஜூலை மாத இறுதியில் மின்கணக்கீடு பணிகள் நடைபெறும். அதன்படி ஆத்திகுளம் பகுதி கனகவேல்நகர் 1 முதல் 3 தெருக்கள் வரை, மூகாம்பிகை கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கங்கை தெரு ஆகிய பகுதிகளில் மின் கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாள்களுக்குள் மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம்.
இதுதொடர்பான விவரங்களுக்கு திருப்பாலை உதவி செயற்பொறியாளர் 0452-2680815, ஆத்திகுளம் மின்பொறியாளர் 0452-2681130 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.