இடி தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை

செக்கானூரணி மாயாண்டிபட்டியை சேர்ந்த சர்க்கரை மகன் பொன்னாங்கன் (35). இவர் கடந்த 14-ஆம் தேதி மாலை ஆடு மேய்த்து கொண்டு இருந்தபோது மழை

செக்கானூரணி மாயாண்டிபட்டியை சேர்ந்த சர்க்கரை மகன் பொன்னாங்கன் (35). இவர் கடந்த 14-ஆம் தேதி மாலை ஆடு மேய்த்து கொண்டு இருந்தபோது மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் பொன்னாங்கன் மற்றும் 6 ஆடுகள் இறந்தன.

உயிரிழந்த பொன்னாங்கன் மனைவி செல்வபாண்டியம்மாளிடம் தமிழக அரசு சார்பில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் உயிரிழந்த கால்நடைகளுக்கான இழப்பிட்டுத் தொகை ரூ. 9 ஆயிரத்திக்கான காசோலையையும் வழங்கப்பட்டது.
அப்போது மாவட்ட ஆட்சியர் வீரராகவாராவ் உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com