கக்கன் பிறந்த நாள்: சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

சுதந்திரப் போராட்டத் தியாகி கக்கனின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பிலும், அரசியல் கட்சி சார்பிலும்

சுதந்திரப் போராட்டத் தியாகி கக்கனின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பிலும், அரசியல் கட்சி சார்பிலும் பிரமுகர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டியில் தியாகி கக்கன் மணிமண்டபம் உள்ளது. இந்த சிலைக்கு மேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் மாலை அணிவித்தார்.
மதுரை மாநகர் காங்கிரஸ் சார்பில் அதன் மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமையில் ராஜாமுத்தையா மன்றம் அருகேயுள்ள கக்கன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அதன் மாநகர் மாவட்டத் தலைவர் பி.சேதுராமன் தலைமையில், கக்கன் சிலைக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராம்பிரபு, பி.வடிவேல்  உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு ஜனதாதளம் சார்பில் அதன் மாநிலப் பொதுச்செயலர் க. ஜான்மோசஸ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாநிலச் செயலர் எம். செல்லபாண்டி, எஸ்.சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com