பாஜகவின் சிறுபான்மை அணி சார்பில் இப்தார் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாஜக-வின் சிறுபான்மை அணி சார்பில் இப்தார் விருந்து விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாட்டுத்தாவணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறுபான்மை அணியின் மாவட்ட பொதுச்செயலர் பஷீர் அகமது தலைமை வகித்தார். மாநிலச் செயலர் பேராசிரியர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் சசிராமன், சிறுபான்மை அணியின் மாநிலப் பொதுச்செயலர் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட சிறுபான்மை அணியின் தலைவர் கல்வாரி தியாகராஜன், துணைத் தலைவர் லாரன்ஸ் வினோத், மாவட்ட பொதுச்செயலர் ஷாம் கே சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.