விளக்கேற்றும்போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

மதுரையில் துளசிமாடத்தில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்ததால் காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை இறந்தார்.

மதுரையில் துளசிமாடத்தில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்ததால் காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை இறந்தார்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் மீனாட்சி (79).  இவர் சம்பவத்தன்று அங்குள்ள துளசி மாடத்தில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தார். இதுதொடர்பாக அவரது மகன் நடராஜன் அளித்தப் புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com