விடுதி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை தாமரைத்தொட்டி பகுதியில் உள்ள ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதியில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்காக தனக்கன்குளம் பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், எனவே அங்கு செல்லும்படியும் விடுதி நிர்வாகம் மாணவர்களிடம் தெரிவித்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை காலை மனு அளித்தனர். இதன்பிறகும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் மாணவர்கள் 60 பேர் விடுதி வாயிலில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாணவர்கள் பிரதிநிதிகள் 5 பேர் மாவட்ட ஆட்சியரை மாலையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் தனக்கன்குளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதிக்குச் சென்றனர்.