தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு

மதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

மதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
 மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் பிச்சை (44). காமராஜர் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஹரிவிக்னேஷ் (19). பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மதுரையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்றுள்ளார்.
 இந்நிலையில் ஒத்தக்கடை யா.புதுப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளில் தந்தையை ஏற்றிக்கொண்டு ஒத்தக்கடையில் விட்டு விட்டு ஹரிவிக்னேஷ் மீண்டும் புதுப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஹரிவிக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸார் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநர் மங்கலக்குடியைச் சேர்ந்த கருப்பசாமியை (37) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com