திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையராக ப.கவிதா பிரியதர்சினி திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
இக்கோயிலில் துணை ஆணையராக பணியாற்றி வந்த க.செல்லதுரை, சங்கரன்கோவிலில் உள்ள சங்க நாராயணசுவாமி கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் சிவகங்கை மாவட்டம் இந்து அறநிலையத் துறையில் நகை சரிபார்த்தல் துணை ஆணையராக பணியாற்றிய ப.கவிதா பிரியதர்சினி திருப்பரங்குன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் திங்கள்கிழமை திருப்பரங்குன்றம்சுப்பிரமணியசுவாமி கோயிலில் துணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.