பாலின் தரத்தை அறிய விழிப்புணர்வு முகாம்

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பேருந்து நிலையம் முன்பாக பாலின் தரத்தை கண்டறிய மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பாக திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றத

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பேருந்து நிலையம் முன்பாக பாலின் தரத்தை கண்டறிய மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பாக திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆணையின்படி மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் மருத்துவர் லட்சுமி நாராயணன்  ஆலோசனையில் இச்சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் பல்வேறு டீக் கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பால் தரமானதாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்கிறதா என பால் மாதிரியை அளித்தனர். அது பகுப்பாய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் முடிவு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com