மதுரை
ரேபீஸ் தாக்கி தொழிலாளி சாவு
மதுரை அரசு மருத்துவமனையில் ரேபீஸ் தாக்கிய கூலித் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் ரேபீஸ் தாக்கிய கூலித் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிவேல் (45). விவசாயக் கூலித் தொழிலாளி. கடந்த 20 நாள்களுக்கு முன் தெரு நாய் பழனிவேலை கடித்துள்ளது. இதற்கு உரிய சிகிச்சை எடுக்காத நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ரேபீஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேபீஸ் வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி பழனிவேல் உயிரிழந்தார். இதையடுத்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்புடன் பழனிவேலின் சடலத்தை எடுத்துச் சென்று எரியூட்டினர்.