திருமங்கலம் ஜவகர் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவர், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி சாரதாதேவி (40), புதன்கிழமை கடைத் தெருவுக்கு பொருள்கள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது, பேருந்து நிலையம் அருகே பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சாரதா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.