மதுரையில் ஜீப் திருட்டு

மதுரை யானைக்கல் பகுதியில் பாலத்துக்கு கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை, மர்ம நபர்கள் போலிச் சாவி போட்டு திருடிச் சென்றதாக சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை யானைக்கல் பகுதியில் பாலத்துக்கு கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை, மர்ம நபர்கள் போலிச் சாவி போட்டு திருடிச் சென்றதாக சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை செல்லூர் ஜான்சிராணிபுரம் 2 ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவருக்குச் சொந்தமான ஜீப்பை யானைக்கல் பாலத்தின் கீழ்பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதுபோல சம்பவத்தன்று ஜீப்பை நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
காலையில் வந்து பார்த்த போது ஜீப்பை, மர்ம நபர்கள் போலிச் சாவி போட்டு திருடிச் சென்றது தெரிய வந்தது. பாலமுருகன் அளித்தப் புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com