மேலூர், ஒத்தக்கடை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளதால், காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும் என மதுரை கிழக்கு மின் பகிர்மானவட்ட செயற்பொறியாளர் எஸ்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
மேலூர் நகராட்சி, நாவினிப்பட்டி, வண்ணாம்பாறைப்பட்டி, பதினெட்டாங்குடி, திருவாதவூர், கொட்டகுடி மற்றும் பணங்காடி சுற்றுவட்டாரப் பகுதிகள் ஒத்தக்கடை, திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, வேளாண்மைக் கல்லூரி, வெளவால்தோட்டம், நரசிங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.