உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் விவசாயிகளுக்கு வண்டல்மண் எடுப்பதற்கு ஆணை வழங்கப்பட்டது.
சிந்துபட்டி உள்வட்ட ஜமாபந்தி உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முழுப்புல பட்டா 23, உள்பிரிவு 57, முதியோர் உதவித்தொகை 32 உள்பட 154 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், சிந்துபட்டி பகுதி விவசாயிகள் 9 பேர் வண்டல் மண் அள்ள அனுமதி கோரி மனு அளித்தனர். வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் வாலாந்தூர் உள்பிரிவுகளில் வண்டல்மண் அள்ள அனுமதிகோரி 4 பேர் மனு அளித்திருந்தனர். இவர்கள் 9 பேருக்கும் வண்டல்மண் அள்ளுவதற்கான அனுமதியை மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி வெள்ளிக்கிழமை வழங்கினர். வட்டாட்சியர் செ.ராமச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக
அலுவலர்கள் உடனிருந்தனர்.