முன்னாள் எஸ்.ஐ. மனைவியிடம் 3 பவுன் நகை, ரூ. 7 ஆயிரம் ரொக்கம் திருட்டு

மதுரையில் நகைக்கடைக்குச் சென்ற முன்னாள் சார்பு ஆய்வாளர் மனைவியிடம் மூன்றேகால் பவுன் நகை, ரூ. 7 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் நகைக்கடைக்குச் சென்ற முன்னாள் சார்பு ஆய்வாளர் மனைவியிடம் மூன்றேகால் பவுன் நகை, ரூ. 7 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். காவல் சார்பு ஆய்வாளராக பணி ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி வெள்ளையம்மாள் (52). இவர் தன்னிடம் உள்ள பழைய நகைகளை மாற்றி புதிய நகை எடுப்பதற்காக, 26 கிராம் தங்க நகைகள், ரூ. 7 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் சென்றுள்ளார். சிம்மக்கல் நிறுத்தத்தில் இறங்கி நகைக்கடை பஜாரில் உள்ள நகைக்கடைக்குச் சென்றுள்ளார். அங்கு பழைய நகையை எடுப்பதற்காக பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது பையில் இருந்த 26 கிராம் தங்க நகை,. ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.
இதுதொடர்பாக வெள்ளையம்மாள் அளித்தப்புகாரின்பேரில் தெற்குவாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது நகைக்கடையில் திருட்டு போகவில்லை என்பது தெரிந்தது. மேலும் பேருந்தில் வரும்போது வெள்ளையம்மாளுக்கு தெரியாமல் மர்ம நபர்கள் நகை, பணத்தைத் திருடியிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com