பெண்ணிடம் சங்கிலி பறித்தவர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த வாரம் சென்றுள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த வாரம் சென்றுள்ளார். பாசிங்காபுரம் சாய்பாபா கோவில் அருகே சென்றபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், ராஜந்திரனின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
  சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் அளித்த புகாரின் அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலியைப் பறித்துச் சென்ற பெரிய ஊர்சேரியைச் சேர்ந்த குபேந்திரன், அலங்காநல்லூர் முத்துவேல், 15 பி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிந்து புவனேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com