மதுரையில் திருக்குறள் ந.மணிமொழியனின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உலத் திருக்குறள் பேரவை மதுரை மாவட்டத் தலைவர் கா.கருப்பையா தலைமை வகித்தார். சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஏ.எஸ்.கணேசன் உலகத் திருக்குறள் பேரவை மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன் மணிமொழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருக்குறள் மணிமொழியன் உருவப் படத்துக்கு கவிதாரெங்கநாதன், அனுராதா கணேசன், அபிராமி கார்த்திகேயன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன் ஆகியோர் மணிமொழியனின் திருக்குறள் பணிகளை நினைவுகூர்ந்து பேசினர்.
நிகழ்ச்சியில் வீ.கே.கே.ஹோட்டல்ஸ் மேனேஜிங் இயக்குநர் பி.ஹரிவாசகம், நியூ காலேஜ்ஹவுஸ் இயக்குநர் கல்யாணராஜன் மணிமொழியன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு ஆயிரவைசியர் சங்க செயலர் எம்.ஜெயராமன் வரவேற்றார். உலகத் திருக்குறள் பேரவை செயலர் மார்சல் முருகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
விநாயகா மிஷன்ஸ் பல்கலை. இயக்குநர் அனுராதா கணேசன் ஏற்புரையாற்றினார். உலகத் திருக்குறள் பேரவை மதுரை மாவட்டச் செயலர் கவிஞர் அசோக்ராஜ் நன்றி கூறினார்.