மானாமதுரை- ராமேசுவரம் இடையே தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட  ரயில்கள் இயங்கும்

மானாமதுரை- ராமேசுவரம் இடையே தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மானாமதுரை- ராமேசுவரம் இடையே தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி:  
மானாமதுரை- ராமேசுவரம் இடையே நடைபெற்ற பணிகள் காரணமாக நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் அவ்வழியே செல்லும் ரயில்கள் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்தப் பணிகள் முன்கூட்டியே முடிந்து விட்டதால் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.
ரயில்கள் விபரம்:  வண்டி எண்.56829/56830, திருச்சி- ராமேசுவரம் பயணிகள் ரயில், வண்டி எண்.56722, ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயில், வண்டி எண்.56721, மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயில் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com