கேலிச் சித்திரம்: தன் மீதான  வழக்கை ரத்து செய்யக் கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா மனு

கேலிச் சித்திரம் வரைந்தது தொடர்பாக தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்துள்ளார்.

கேலிச் சித்திரம் வரைந்தது தொடர்பாக தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்கிற பாலா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு  விவரம்: கந்துவட்டி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து குடும்பத்தினர் அக்டோபர் 23-ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தனர்.
  இதுதொடர்பாக கேலிச் சித்திரம் ஒன்றை வரைந்து அக்டோபர் 24-ஆம் தேதி எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில் தமிழக முதல்வர், திருநெல்வேலி ஆட்சியர், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ஆகியோர் அரை நிர்வாணக் கோலத்தில் நின்றவாறு எரியும் சிறுவனின் உடலைப் பார்ப்பது போல வரைந்திருந்தேன்.
இந்தக் கேலிச் சித்திரம் தொடர்பாக அக்டோபர் 31-ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் என் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் படி வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நவம்பர் 5-ஆம் தேதி சென்னைக்கு வந்த திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் என்னை கைது செய்தார். தற்போது நான் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளேன்.
நான் எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபடாத நிலையில் என் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது தவறு. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com