மதுரை ஊரகப் பகுதிகளில் தொடர்திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து 22 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபடுபவர்களை
பிடிக்க ஊரகக்காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி, கருப்பாயூரணி காவல் நிலையத்தில் 5 திருட்டு, வழிப்பறி கொள்ளை வழக்குகள்,ஒத்தக்கடை, கொட்டாம்பட்டிதிருட்டு வழக்குகளில் தொடர்புடைய, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேஉள்ள ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜூ(37), முறிய பாஞ்சான் வேலூரைச் சேர்ந்த கார்மேக கண்ணன்ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.