திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை: வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
       திருமங்கலம் அருகே உள்ள கல்லாணையைச் சேர்ந்த சுப்ரமணியன் மகள் கனி (24). இவருக்கும், சின்ன உலகாணியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது, கனி கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
     இந்நிலையில், கல்லாணையில் உள்ள தந்தை வீட்டுக்குச் சென்றிருந்த கனி, அங்கு கடந்த 14-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த கனியை, அவரது குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கனி சனிக்கிழமை உயிரிழந்தார்.
     இது தொடர்பாக அவரது தந்தை சுப்ரமணியன் அளித்த புகாரின்பேரில், கூடக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com