மதுரையில் இளைஞர் கொலை

மதுரையில் பெண் தொடர்பான  தகராறில் வியாழக்கிழமை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மதுரையில் பெண் தொடர்பான  தகராறில் வியாழக்கிழமை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
      மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சின்னத்துரை (28).  துணிதுவைக்கும் தொழில் செய்து வந்த  இவர்  அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.  மேலும், அப்பெண்ணை தனக்கு திருமணம் செய்து தருமாறு பெண்ணின் சகோதரரிடம் சின்னத்துரை வற்புறுத்தியுள்ளார்.    இதனால் ஏற்பட்ட  தகராறில் வியாழக்கிழமை இரவு சின்னத்துரையை பெண்ணின் சகோதரர் கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த சின்னத்துரை உயிரிழந்தார்.  இதுகுறித்து கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து பெண்ணின் சகோதரரை பிடித்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com