மதுரையில் மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (அக்.7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மின்பகிர்மான வடக்கு செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாட்டுத்தாவணி மற்றும் அண்ணா பேருந்து நிலைய உப மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இப் பணிகளால் மேற்குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: லேக் ஏரியா, கே.கே.நகர் தொழிற்பேட்டை, அண்ணாநகர், ராமவர்மா நகர், பி.ஆர்.சி., அழகர்கோவில் பிரதான சாலை, கற்பகநகர், லூர்துநகர், கணபதிபுரம், சர்வேயர் காலனி, சூரியா நகர், மின்நகர், கொடிக்குளம். இலந்தைக்குளம், கோமதிபுரம், பாண்டிகோவில் பண்ணை, மேலமடை, செண்பத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, வளர்நகர், அம்பளக்காரன்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனிகார்டன், பி.எம்.நகர், ஆதிஈஸ்வரன்நகர்.
அண்ணா பேருந்துநிலையம், ஆட்சியர் அலுவலகப் பகுதிகள், காந்தி அருங்காட்சியகம், கரும்பாலை, டாக்டர்தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்பிஐ குடியிருப்பு, காந்திநகர், மதிச்சியம், செனாய்நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர். மருத்துவக் கல்லூரி, பனகல் சாலை, அமெரிக்கன் கல்லூரி சாலை, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் சாலை, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2 இ2 சாலை. ஓ.சி.பி.எம். பள்ளி பகுதிகள், செல்லூர் பகுதிகள், ஆர்.எஸ்.நாயுடு சாலை, களத்துப்பொட்டல், பாலம் ஸ்டேசன் சாலை, கான்சாபுரம், பிஎஸ்என்எல் தல்லாகுளம், ராஜம் பிளாசா, யூனியன்கிளப், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் சாலை, ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம். முனிச்சாலை பகுதி, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தைப் பொட்டல், வெற்றிலைப்பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் ஆகிய பகுதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.