மேலூரில் வியாழக்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மேலூர் பஸ் நிலையம் முதல் செக்கடி பஜார் வரையிலும் சாலையோரத்தில் பழ வண்டிகளும், கடைகளின்முன்புற ஆக்கிரமிப்புக்களும் அதிகரித்து இருந்தன. இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன விபத்துக்கள் நடந்தன.
இந்நிலையில், தற்போது மேலூர் காவல் துணை கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள சக்கரவர்த்தி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி, மேலூர் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தள்ளுவண்டிகளை மேலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகில் நிறுத்திக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலூர் போக்குவரத்துகாவல் பிரிவினர் கூடுதல் போலீஸாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.