உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
உசிலம்பட்டி வட்டம், போலிபட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்பவரது மனைவி கவிதா (27). இவர், கடந்த 4 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். காய்ச்சல் குறையாததால், செவ்வாய்கிழமை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. அதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.