தொழிற்சா லைகளுக்கு 2018- ம் ஆண்டு க்கான உரிமத்தைப் புதுப்பிக்க க்.31-ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலகப் பாது காப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் சு.ராஜமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழிற்சாலைகள் சட்ட விதிகளின்படி உரிமத்தை ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். வரும் ஆண்டுக்கான புதுப்பித்தல் விண்ணப்பம் அக்.31-ஆம் தேதிக்குள் தொ ழிலகப் பாதுகாப்பு இணை இயக் குநர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும்.
உரிமக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கோ டிட்ட வரைவோலையாக எடுத்து படிவம் எண்-2 விண்ணப்பத்தில் 3 நகல்கள் பூர்த்தி செய்து அதில் ஒன்றில் ரூ.2-க்கான நீதிமன்றக் கட்டணவில்லை ஒட்டி அசல் உரிமத்துடன்
அக்.31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய காலத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்காமல், நவம்பரில் பெபட்டால் உரிமக் கட்ட ணத்தில் 10 சதவீதம் கூடுதலாகவும், டிசம்பரில் சமர்ப்பித்தால் 20 சதவீதம் கூடுதலாகவும், அதன் பிறகு சமர்ப்பித்தால் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.