தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க அக்.31 கடைசி

தொழிற்சா லைகளுக்கு 2018- ம் ஆண்டு க்கான உரிமத்தைப் புதுப்பிக்க  க்.31-ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சா லைகளுக்கு 2018- ம் ஆண்டு க்கான உரிமத்தைப் புதுப்பிக்க  க்.31-ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலகப் பாது காப்பு  மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் சு.ராஜமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழிற்சாலைகள் சட்ட விதிகளின்படி உரிமத்தை ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். வரும் ஆண்டுக்கான புதுப்பித்தல் விண்ணப்பம் அக்.31-ஆம் தேதிக்குள் தொ ழிலகப் பாதுகாப்பு இணை இயக் குநர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும்.
 உரிமக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கோ டிட்ட வரைவோலையாக எடுத்து படிவம் எண்-2 விண்ணப்பத்தில் 3 நகல்கள் பூர்த்தி செய்து அதில் ஒன்றில் ரூ.2-க்கான நீதிமன்றக் கட்டணவில்லை ஒட்டி அசல் உரிமத்துடன்
அக்.31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
 உரிய காலத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்காமல்,  நவம்பரில் பெபட்டால் உரிமக் கட்ட ணத்தில் 10 சதவீதம் கூடுதலாகவும், டிசம்பரில் சமர்ப்பித்தால் 20 சதவீதம் கூடுதலாகவும், அதன் பிறகு சமர்ப்பித்தால் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com