மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியில் வென்ற, பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஏ.கே.மாதவன் பளுதூக்கும் போட்டியில், சரசுவதி நாராயணன் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணிதத் துறை மாணவி கே. ஐஸ்வர்யா 53 கிலோ எடைப் பிரிவில் முதல் இடத்தையும், இரண்டாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவி ஏ. சித்ரா 48 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
இதேபோல், மூன்றாம் ஆண்டு பொருளியல் துறை மாணவர் எம். விக்னேஷ் 62 கிலோ எடைப் பிரிவில் முதல் இடத்தையும், மூன்றாம் ஆண்டு கணிதத் துறை மாணவர் கே. சோணைமுத்து 69 கிலோ எடைப் பிரிவில் முதல் இடத்தையும் பெற்று கோப்பையை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பாராட்டு விழா, கல்லூரி முதல்வர் மு. கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி விளையாட்டுத் துறை இயக்குநர் யுவராஜ் வரவேற்றார். துணை முதல்வர் கே. கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.