மதுரை தல்லாகுளம் அருகே உள்ள நாகனாகுளம் வாசுநகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் முகமது முகைதீன்(75). இவர் குடும்பத்தினருடன் பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். பின்னர் புதன்கிழமை இரவு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு 15 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.