மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் சாவு

மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.

மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.
   மதுரை அண்ணாநகர் யாகப்பா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் விஜய். இவரது மகன் பாரதிவேல் (3). அப்பகுதியில் உள்ள பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். இந்நிலையில் நான்கு நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாரதிவேல், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com