மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது.
இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். முகாமில் அசல் மற்றும் நகல் கல்விச்சான்று, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். மதுரை நகரம் மற்றும் புறநகரப் பகுதிகளில் வசிக்கும் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இருபாலரும் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இத் தகவலைத் தெரிவித்து உள்ளார்.