ரயில்கள் பயண நேரத்தில் மாற்றம்

திருநெல்வேலி - திருச்செந்தூர், மானாமதுரை - ராமேசுவரம் இடையே இயங்கும் ரயில்களின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - திருச்செந்தூர், மானாமதுரை - ராமேசுவரம் இடையே இயங்கும் ரயில்களின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி: திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவுக்கு இடையே உள்ள செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள், மானாமதுரை - ராமேசுவரம் பிரிவுக்கு இடையே உள்ள மண்டபம் - ராமேசுவரம் ரயில் நிலையங்களில் தண்டவாளப் பராமரிப்பு நடைபெறுவதால் இவ்வழியே இயங்கும் சில பயணிகள் ரயில்கள் 13 நாள்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தாற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் விபரம்: மதுரையில் இருந்து புறப்படும் வண்டி எண்.56723, மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில் மண்டபம்-ராமேசுவரம் இடையே செப்.18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இயக்கப்படாது.
ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண்.56722, ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் செப்.18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ராமேசுவரம்-மண்டபம் இடையே இயக்கப்படாது என்று அறிவிக்கப்படுகிறது.
பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள் விபரம்: திருநெல்வேலியில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56763, திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயில் செப்.18 முதல் 27 ஆம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும். திருச்செந்தூரில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56035 திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் ரயில் செப்.18 முதல் 27ஆம் தேதி வரை காலை 10.30 மணிக்கு புறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com