"தூய்மையே சேவை': உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் துப்புரவு பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி  அமைப்பு மாணவர்கள் சார்பில், உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி  அமைப்பு மாணவர்கள் சார்பில், உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், தூய்மையே சேவை இயக்கம் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை பல்வேறு வகையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துவிஜயபாண்டியன்
தலைமையில், அமைப்பு மாணவர்களான நாட்டு நலப்பணித் திட்டம், இளஞ் செஞ்சிலுவை சங்கம்,
பாரத சாரணர் படை, பசுமைப் படை என 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாவட்டக் கல்வி
அலுவலக வளாகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதில், அமைப்பு ஆசியர்கள் செல்லப்பாண்டி, பாண்டி, வேல்முருகன்,பிரதீப்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com