மதுரை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள நரியம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி சுமதி (32). இவர், பாறைப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள கால்வாய் வழியாக சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சுமதியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக செக்கானூரணி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.