மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (கிழக்கு) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (கிழக்கு) அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் தங்களுக்கான குடிநீர் இணைப்பு, சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய வரி விதிப்பு,
கட்டட வரைபட அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை ஆணையரிடம் மனுவாக அளித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.