இருசக்கர வாகனங்கள் மோதல் சுமை தூக்குபவர் சாவு

திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சியைச் சேர்ந்தவர் பூமி(45). இவர் கப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் பணியாளராக இருந்தார்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சியைச் சேர்ந்தவர் பூமி(45). இவர் கப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் பணியாளராக இருந்தார். வியாழக்கிழமை மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் நான்கு வழிச்சாலை வழியாக ஆஸ்டின்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.  
 ஆஸ்டின்பட்டியில் இருந்து தனக்கன்குளம் பர்மா காலனிப் பகுதியைச் சேர்ந்த காசி என்பவர் 2 பெண்களுடன் இருசக்கர வாகனத்தில் நான்கு வழிச்சாலை நோக்கி வந்து கொண்டிருந்தார். 
ஆஸ்டிபட்டி காவல்நிலையம் செல்லும் சாலையில் இரு வாகனங்களும் மோதிக்கொண்டன. இதில் பூமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வாகனத்தில் வந்த காசி உள்ளிட்ட 3 பேரும் காயமடைந் தனர். 
  சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பூமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  காயமடைந்தவர்களை ஆஸ்டின்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com