மதுரை அருகே எட்டாம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்ற 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மதுரை அருகே உள்ள துவரிமானைச் சேர்ந்த 15 வயது சிறுமி மதுரையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி காணாமல்போனார். இதையடுத்து, அவரை பெற்றோர் தேடியபேது, துவரிமான் மேலத்தெருவைச்சேர்ந்த மாசாணம் மகன் பாலாஜி(21), கணேசபுரத்தைச்சேர்ந்த முருகன் மகன் பிரபு (20), மூர்த்தி மகன் சூர்யா (20), பழனிச்சாமி மகன் விஜய்(20) ஆகிய நால்வரும் சேர்ந்து மாணவியைக் கடத்திச்சென்றது தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் அளித்தப் புகாரின்பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.