மதுரை சிறப்பாசிரியர்களுக்கு நாளை சான்றுகள் சரிபார்ப்பு

சிறப்பாசிரியர்களாகத் தேர்வானவர்களுக்கு மதுரையில் திங்கள்கிழமை (ஆக.13) காலை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பாசிரியர்களாகத் தேர்வானவர்களுக்கு மதுரையில் திங்கள்கிழமை (ஆக.13) காலை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் பள்ளிகளில் உடற்கல்வி, இசை, ஓவியம், கைத்தொழில் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்று சரிபார்க்கும் நிகழ்ச்சி, மதுரை ஓ.சி.பி.எம். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதுரை மாவட்ட அளவில் 157 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், சாதி, வருவாய் மற்றும் இருப்பிடச் சான்று என அனைத்து முக்கிய சான்றுகளும் சரிபார்க்கப்பட உள்ளதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். கோபிதாஸ், நேர்முக உதவியாளர் சின்னதுரை ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com