அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறும்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
  மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளிலும், பொதுவான இடங்களில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் முக்கிய அம்சமாக, மதுரை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.   கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், முழு சுகாதார இயக்கம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் நிதி செலவினங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆகவே, அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com