பிஎஸ்என்எல் முன்னாள் பொறியாளர் வீட்டில்  57 பவுன் நகை, ரூ. 5 லட்சம் திருட்டு

மதுரையில் பிஎஸ்என்எல் முன்னாள் பொறியாளர் வீட்டில் பூட்டை உடைத்து 57 பவுன் நகை, ரூ.5 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் பிஎஸ்என்எல் முன்னாள் பொறியாளர் வீட்டில் பூட்டை உடைத்து 57 பவுன் நகை, ரூ.5 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மகாத்மா காந்தி நகர் நர்மதா நதித் தெருவைச் சேர்ந்தவர் கணபதி(67). இவர் தொலைதொடர்புத்துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் மதுரை மாவட்டம் வாகைக்குளத்தில் உள்ள தனது மகள் பிருந்தாவின் வீட்டுக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திங்கள்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கச்சங்கிலி, வளையல்கள், நெக்லஸ், தோடு  உள்ளிட்ட 57 பவுன் நகைகள் மற்றும் பீரோவின் லாக்கரில் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக கணபதி அளித்தப் புகாரின் பேரில் கூடல் புதூர் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து சந்தேகத்துக்குரிய நபர்களின்  நடமாட்டம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com