ரயில்மோதி மூதாட்டி சாவு

திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை ரயில்மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை ரயில்மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
 திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளத்தைச் சேர்ந்த ராஜூ மனைவி ஜெயக்கொடி(70). இவர் செவ்வாய்க்கிழமை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்கச் சென்றாராம். பேருந்து நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் மோதி ஜெயக்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com