பாஜகவினரால் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை அகற்றக் கோரி மதுரையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமி திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக மதுரை வந்திருந்த அவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலமாசி வீதி- தெற்குமாசி வீதி சந்திப்பு பகுதியில் பாஜகவினரால் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றக் கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராட்டத்தைத் தொடர்ந்த அவர் திடீரென மயக்கமடைந்ததையடுத்து அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்றார் என போலீஸார் தெரிவித்தனர்.